search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை கதறல்"

    தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் பலியான சம்பவம் அம்மாப்பேட்டை பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    அம்மாப்பேட்டை:

    தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள உடையார் கோவில் கிராமம் காடவராயர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். கூலித் தொழிலாளி. இவருடைய குழந்தைகள் தாரிகா (வயது 4), சித்தார்த் (2).

    இந்த நிலையில் நேற்று தாரிகாவும், சித்தார்த்தும் வீட்டின் அருகே உள்ள குளக்கரையில் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அவர்கள் இருவரும் திடீரென குளத்தில் இறங்கினர். இதையாரும் கவனிக்கவில்லை. இதனால் குளத்தில் இறங்கிய தாரிகாவும், சித்தார்த்தும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

    இந்த நிலையில் விளையாட சென்ற மகனும், மகளும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமாரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் குளத்துக்கு சென்று பார்த்தனர். கரையில் இருவரையும் காணாததால் சந்தேகத்தின் பேரில் குளத்திற்குள் இறங்கி தேடிப்பார்த்தனர்.

    அப்போது குளத்திற்குள் மூழ்கி உயிரிழந்த தாரிகா மற்றும் சித்தார்த் ஆகியோரின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். குழந்தைகளின் உடல்களை பார்த்து சதீஷ்குமாரின் மனைவி கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க செய்தது. இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூரில் தந்தையின் குடிப்பழக்கத்தால் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்து கதறிய தந்தை இனி மது குடிக்க மாட்டேன் என்று கூறினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையம் அருமை காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (38). இவரதுமனைவி பேபி (34). இவர்களுக்கு ஹரிஹரன் (14) என்ற 9-ம் வகுப்பு படிக்கும் மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    பிரகாஷ் தினமும் மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும் போது மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதைப்பார்த்த மாணவர் ஹரிஹரன் தன் தந்தையிடம் உங்களுக்கு நாங்கள் 2 பிள்ளைகள் உள்ளோம்.

    நீங்கள் மது குடித்து விட்டு வந்து தினமும் வீட்டில் தகராறு செய்தால் நாங்கள் எப்படி படிக்க முடியும். ஏன் இப்படிசெய்கிறீர்கள் என்று கூறிவந்தார். பல முறை மாணவர் ஹரிஹரன் தன் தந்தைக்கு அறிவுரை சொல்லியும் அவர் கேட்ட பாடில்லை.

    சம்பவத்தன்றும் பிரகாஷ் வேலை முடிந்து குடி போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் வழக்கம்போல் தனது மனைவி பேபியிடம் தகராறு செய்தார்.

    அப்போது அங்கு வந்த மாணவர் ஹரிஹரன், தனது தந்தையிடம் பல முறை நான் சொல்லியும் நீங்கள் கேட்க மறுக்கிறீர்கள். எனவே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றார். ஆனால் அதை பிரகாஷ் கண்டு கொள்ளவில்லை.

    தொடர்ந்து அவர் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது திடீரென மாணவர் ஹரிஹரன் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

    பின்னர் மாணவர் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதையடுத்து பிரகாஷ் மற்றும் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து கதவை திறந்து பார்த்தனர். அப்போது மாணவர் பிரகாஷ் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுப்பற்றி 15 வேலம்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர்அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவர் தற்கொலை குறித்து போலீசார், பிரகாசிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது-

    நான் குடித்து விட்டு வருவதை என் மகன் தினமும் கண்டித்து வந்தான். மேலும் குடியை நிறுத்தாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறிவந்தான். இதை நான் பொருட்படுத்தவில்லை.

    நேற்று முன்தினம் நான் மனைவியிடம் சண்டை போட்ட போது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். இனி நான் சத்தியமாக குடிக்கவே மாட்டேன் என்று கூறினார்.

    தொடர்ந்து பிரகாஷ் வீட்டில் வைத்திருந்த குவாட்டர் மது பாட்டிலை வெளியே கொண்டு வந்து வீசி உடைத்தார். மேலும் தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது அவர் குடிப்பழக்கத்தால் நான் என் மகனை இழந்து விட்டேனே என்று கூறியப்படி கதறி அழுதார். #Tamilnews
    ×